S.P.பட்டினம் சையது முகம்மதுவை சுட்டு கொன்ற SI காளிதாஸ் சஸ்பெண்ட்!

ராமநாதபுரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற கைதியை காவல் நிலையத்தில் சுட்டுக் கொன்ற எஸ்.ஐ. காளிதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி பட்டினத்தைச் சேர்ந்த சையது முகம்மது என்பவரை, விசாரணைக்காக எஸ்.பி.பட்டினம் காவல்நிலைய எஸ்.ஐ. காளிதாஸ்  (14ஆம் தேதி) அழைத்துச் சென்றார். இதையடுத்து, காவல் நிலையத்தில் நடந்த விசாரணையின்போது, சையது முகமது கத்தியால் எஸ்.ஐ.யை தாக்க முயன்றதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.


இதையடுத்து, எஸ்.ஐ. காளிதாஸ் தனது துப்பாக்கியால் சையது முகமது சுட்டுள்ளார். இதில் சையது முகமது சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 


இந்நிலையில், சையது முகமதுவை சுட்டுக்கொன்ற் எஸ் .ஐ. காளிதாஸை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகணன் உத்தரவிட்டுள்ளார்.


இதற்கிடையே, சுட்டுக்கொல்லப்பட்ட சையது முகமதுவின் உடல் தடயவியல் மருத்துவர்கள் வருகைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


கத்தி குத்தில் காயமடைந்த எஸ்.ஐ.காளிதாஸ் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


நீதிபதி நேரில் விசாரணை இதனிடையே, விசாரணை கைதி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வேலுச்சாமி, நேரில் விசாரணை நடத்தினார்.
Share on Google Plus

About super

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

கருத்துரையிடுக