அவர்களை கேவலபடுத்தும் விதமாக சொல்லபடும் ஒரு சிறு வார்த்தை கூட முஸ்லிம்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும் வலிமை பெற்றவை.
பாகிஸ்தானானில் 2010 ஆம் ஆண்டு சில முஸ்லிம் பெண்களுக்கும் ஆசிய பீவி என்ற கிருத்துவ பெண்ணிற்கும் இடையே நடை பெற்ற வாக்கு வாதத்தின் போது ஆசியா பீவி என்ற கிருத்துவ பெண் பிரச்சனையில் தொடர்புடைய பெண்களை வசைபாடுவதை விட்டு விட்டு அவர்கள் சார்ந்த இஸ்லாமிய மார்கத்தையும் அந்த மார்கத்தின் வழிகாட்டியாக உள்ள முஹம்மது நபியையும் கடுமையான வார்த்தைகளில் வசைபாடினால்
இதனை தொடர்ந்து அந்த கிராமத்தின முஸ்லிம் பெண்கள் இந்த பிரச்சனையை அந்த கிரமத்தின் பள்ளியின் இமாமிடம் சொல்லினர் .அவர் வழக்கை நீதி மன்றத்திற்கு எடுத்து சென்றார்
நிதிமன்றம் வழக்கை விசாரித்து ஆசியா பீவி என்ற கிருத்துவ பெண்ணிற்கு மரண தண்டனை விதித்தது .இந்த தண்டனையை எதிர்த்து அந்த பெண் மேல் முறையீடு செய்தால் மேல் முறையீட்டை விசாரித்த உயர் நீதி மன்றம்
இந்த நாடும் நாட்டில் உள்ளவர்களும் முஹம்மது நபி அவர்களை தங்களது உயிரினும் மேலாக மதிக்ககுடியவர்கள் அப்படி பட்ட ஒரு மாமனிதரை வசை பாடுவது என்பது சாதரண குற்றம் இல்லை என்பதாலும் இந்த நாட்டின் சட்டம் இத்தகிய குற்றங்களுக்கு மரண தண்டனை தான் பரிகாரம் என்று கருதுவதாலும் அந்த பெண்ணுக்கு விதிக்கபட்ட தண்டனையை இந்த நீதி மன்றம் உறுதி செய்வதாக நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கியது.
0 comments:
கருத்துரையிடுக