சிறு வயதில் திருமணமும் ஷரியத்தின் அனுமதியும்

இஸ்லாமிய ஷரிஆவைப் பொறுத்தவரையில் திருமணம் முடிப்பதற்கான வயது இன்னதுதான் என்று வரையறை செய்யப்படவில்லை. மாறாக திருமணம் நிலையானதாகவும் அதன் நோக்கம் நிறைவேற்றத் தக்கதாகவும் குறித்த ஒப்பந்தம் இருக்க வேண்டியது அவசியம். பெரும்பான்மையான இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து, பருவ வயதை அடைந்த ஒரு ஆண் சுயமாகத் திருமணம் முடிக்க முடியும் என்றும் அவ்வாறே ஒரு பெண் பொறுப்பாளரினால் திருமணம் முடித்துக் கொடுக்கப்படுவாள் என்பதும் ஏகோபித்த முடிவாகும்.
பருவ வயதை அடையாத சிறுமிகளைப் பொறுப்பாளர் திருமணம் செய்துவைக்க முடியும் என்பது நான்கு மத்ஹபுகளினதும் இன்னும் சலபுஸ் சாலிஹீன்களினதும் வழிமுறையாகும். இதற்கு நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையே போதுமானதாகும் . உதாரணமாக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பருவ வயதை அடைய முன்னர் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

« الثَّيِّبُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا وَالْبِكْرُ يَسْتَأْمِرُهَا أَبُوهَا »


(يزوجها)

திருமண பந்தத்தில் இணையவிருப்பது "சிறிய வயதுடையவர்களாக இருந்தால் அவர்களது பொறுப்பாளிகளே அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பார்" 
{தாரகுத்னி}
நபியவர்கள் ஜாஹிலியாக்கால வழமையின் அடிப்படையில் இதனைச் செய்யவில்லை. மாறாக மார்க்க ரீதியான அனுமதி இருப்பதினாலேயே அவ்வாறு மணமுடித்தார்கள் என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது:
ஆயிஷாவே கனவில் நீ மூன்று முறை எனக்கு எடுத்துக் காட்டப்பட்டாய்.ஒரு பட்டாடைத் துணியொன்றால் உன்னை போர்த்தியவன்னம் ஒரு மலக்கு என்னிடத்தில் காண்பிப்பார்.திறையை நீக்கிப்பார்த்தால் உன் முகம் தெரியும்.அப்பொழுதெல்லாம் 'இது அல்லாஹ்விடமிருந்து வந்த செய்தியென்றால் அவன் அதனை நடத்திவைப்பான்" என்று சொல்லிக் கொள்வேன்.என்று நபியவர்கள் என்னிடத்தில் சொன்னார்கள். (முஸ்லிம்)
இதனால்தான் அல்குர்ஆனும் பருவயதடையாத பெண்கள் தலாக் சொல்லப்பட்டால் அவர்களது இத்தா கால எல்லை பற்றி அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مِنْ أَمْرِهِ يُسْرًا 

மாதவிடாய்க் காலத்தைக் கடந்த வயதிலுள்ள பெண்களதும், இதுவரை மாதவிடாய் வராத பெண்களதும் இத்தாக்கால எல்லை மூன்று மாதங்களாகும்.கர்ப்பிணிகளின் இத்தாக்காலம் கர்ப்பம் தரிக்கும் வரையில் (தலாக்:4)
இமாம் புஹாரி தலைப்பிடுகிறார்கள் - சிறிய இளம் பெண்களை திருமணம் செய்வதும் , திருமணம் செய்து கொடுப்பதும்.
இமாம் பைஹகி தனது கிதாப் மாரிஃபதுள் ஸுனன் வல் ஆஸார் அறிவிக்கிறார் 
இளம் சிறிய பெண் பிள்ளைகளை திருமணம் செய்வதும் , இளம் சிறிய பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பதும் சஹாபாக்களின் வழக்கமாக இருந்தது.
மேற்குறிப்பிடப்பட்ட அம்சங்கள் சிறியவயதில் திருமண ஒப்பந்தத்தையும், உடல் தகுதி பெறும் வயதில் குடும்ப உறவை அனுமதிப்பதையும் காணலாம்.
பருவமடையாத பெண்களை தந்தையோ, பாட்டனோ மட்டுமே வலியாக நின்று முடித்துவைக்க முடியும் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. ஷாபி மத்ஹபில் தந்தை அல்லது பாட்டன் பருவமடைந்த பின் மணமுடித்து வைப்பதயே சிறந்தது எனக்கருதுகின்றது. இமாம் அபூ ஹனீபா, அவ்ஸாபி போன்றோர் அனைத்து வலிகாரர்களுக்கும் பருவமடையாத பெண்ணை திருமணம் முடித்து வைக்க முடியும் எனக் கருதுகின்றனர். எனினும் அவள் பருவமடைந்ததும் அவள் விரும்பினால் 
ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமையும் அவளுக்கிருக்கிறது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.
இதைப் புரிந்து கொள்ள இஸ்லாமிய மார்க்கத்தின் சில அடிப்படை உண்மைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் அனைத்தும் இறைவனால் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நபி சள்ளல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் வஹியின் அடிப்படையிலேயே செயற்பட்டார்கள் என்பது எல்லா முஸ்லிம்களினதும் நம்பிக்கையாகும். குர்ஆனிய வசனங்களையும் ஹதீஸ்களின் ஆராதங்களையும் வரலாற்றையும் நோக்கும் போது நபிகளார் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஆறு வயதில் திருமணம் செய்ததும் ஒன்பது  வயதில் உறவு வைத்துக்கொண்டதும் ஜாஹிலிய்யாக்கால நடைமுறையில் இருந்த ஒரு விடயமாக இருந்தாலும் அது வஹியினடிப்படையில் உள்ள ஓர் அம்சமாகும் என்பதே மிகச்சரியானதாகும். இன்னும் இது நபி வழியாகும்.
  

 وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَىٰ أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ  ۖ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ

இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் “எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள். 5:83.
Share on Google Plus

About super

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

1 comments: